search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராவல்ஸ் உரிமையாளர் கைது"

    பணத் தகராறில் காங்கிரஸ் செயலாளரை தாக்கிய டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    திருவட்டார்:

    திருவட்டார் கூற்றுவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது48). இவர் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராக உள்ளார். மேலும் திருவட்டார் பஸ் நிலையம் அருகே பேக்கரி நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை திருவட்டார் அருகே வெட்டுக்குழி என்ற இடத்தில் மோகன்தாஸ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மார்த்தாண்டத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் சசி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    மோகன்தாசின் மனைவியை வெளிநாட்டில் நர்சு பணிக்கு அனுப்புவதற்காக கூறி, சசி பண மோசடி செய்து விட்டதாக ஏற்கனவே அவர் மீது திருவட்டார் போலீசில் மோகன்தாஸ் புகார் செய்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதால் சசியிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி மோகன்தாஸ் கேட்டதால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் முற்றியதால் கட்டையால் மோகன்தாசை தாக்கி விட்டு சசி அங்கிருந்து சென்று விட்டார். இதில் காயம் அடைந்த மோகன்தாஸ் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது பற்றி திருவட்டார் போலீசிலும் மோகன்தாஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஆகியோர் சசி மீது வழக்குபதிவு செய்தனர். கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் டிராவல்ஸ் உரிமையாளர் சசியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    வேலூரில் போலி ரெயில் டிக்கெட்டை தயாரித்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி ரெயில் டிக்கெட், கணினி, லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை அருகே 100-க்கும் மேற்பட்ட டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்கள் இயங்கி வருகின்றன.

    இதில் சிலவற்றில் ரெயில் பயணத்துக்கான போலி இ-டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பாபுராவ் தெரு, மெயின்பஜார், தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    இதில் பாபுராவ் தெருவில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்றில் வெவ்வேறு பெயர்களில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட போலி ரெயில்வே டிக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்த ஏஜென்சி உரிமையாளர் சுரேஷ் (வயது 33) என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்து அங்கிருந்த போலி ரெயில் டிக்கெட், கணினி, லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற செயல்களில் இனியாராவது ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்துள்ளனர்.
    ×